கூடுதலாக 31 நாடுகளுக்கு 14.4 மில்லியன் தடவை போடக்கூடிய தடுப்பூசியை அடுத்த வாரம் அனுப்புவதற்கான பணிகளில் கோவேக்ஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இவ்வேளையில் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையை வீணடித்துவிட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. உலகிற்கு தடுப்பூசி மருந்தைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை ஏற்று நடத்தும் கோவேக்ஸ், வரும் வாரத்தில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்ப உள்ளது.
இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொவிட்-19 கொள்ளைநோய் குணமாகிவிட்டது என்ற எண்ணம் மக்களுக்கு வரக்கூடாது என்றும் அடுத்தக்கட்ட பரவல் எந்நேரத்திலும் நிகழக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

