'சிங்கப்பூர் - மலேசிய எல்லையை மீண்டும் திறக்க தடுப்பூசி வழிவகுக்கும்'

'சிங்கப்பூர் - மலேசிய எல்லையை மீண்டும் திறக்க தடுப்பூசி வழிவகுக்கும்'

1 mins read
56889eff-22c7-4c49-a077-45fb24a14ca4
-

இஸ்­கந்­தர் புத்­தேரி: மலே­சி­யா­விலும் சிங்­கப்­பூ­ரி­லும் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டுள்ள தடுப்­பூ­சித் திட்­டங்­க­ளால் இரு நாடு­களும் இந்த ஆண்­டில் தங்­கள் எல்­லை­யை திறந்­து­விட வழி பிறக்­கும் என்று ஜோகூர் அர­சாங்­கம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

ஜோகூர் சுற்­று­லாத்­துறை, இளை­யர் மற்­றும் விளை­யாட்­டுக் குழு­வின் தலை­வர் திரு ஓன் ஹாஃபிஸ் காஸி நேற்று இவ்­வாறு தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்­குத் தங்­கள் எல்­லை­யைத் திறந்­து­வி­டு­வ­தற்கு ஆன அனைத்து நட­வ­டிக்­கை­க­ளு­ட­னும் ஜோகூர் மாநில அர­சாங்­கம் தயார் நிலை­யில் உள்­ளது என திரு ஓன் தெரிவித்தார்.

இருப்­பி­னும் இது­கு­றித்த முடிவு மத்­திய அர­சின் கையில் உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

இரு நாடு­க­ளுக்கு இடையே பய­ணம் மேற்­கொள்­ப­வர்­க­ளின் பாது­காப்பு தொடர்­பான பேச்­சு­வார்த்தை தொடர்ந்து நடை­பெற்று ­வ­ரு­வ­தாக திரு ஓன் கூறி­னார்.