ஆங் சான் சூச்சி மீதான லஞ்சக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மறுப்பு

மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து இன்றும் (மார்ச் 12) அதிகளவில் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.

மியன்மார் ராணுவம் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேரைக் கொன்றுவிட்டதாக அங்குள்ள மனித உரிமைக் குழு ஒன்று கூறியது.

இந்நிலையில், ஆங் சான் சூச்சி லஞ்சம் பெற்றதாக ராணுவம் கூறி வருவதில் உண்மை இல்லை என்று அவரின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அதனை எதிர்த்து மியன்மாரில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவாட்டி சூச்சியும் அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாட்டி சூச்சி 600,000 அமெரிக்க டாலர் பணத்தையும் தங்கத்தையும் லஞ்சமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஸா மின் துன் நேற்று தெரிவித்திருந்தார்.

திருவாட்டி சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும் சேர்க்கும் பட்சத்தில் அவருக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!