பிகேஆர் கட்சியின் முக்கிய தலைவர் திடீர் விலகல்

பிகேஆர் கட்சியின் முக்கிய தலைவர் திடீர் விலகல்

1 mins read
8c9735a1-00ff-4751-8ef9-a272094464d2
-

மலே­சி­யா­வில் அன்­வார் இப்­ரா­கிம் தலை­மையிலான பிேகஆர் கட்­சி­யின் உத­வித் தலை­வ­ராக இருந்த சேவி­யர் ஜெயக்­ ­குமார் (படம்) நேற்று அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கி­னார். கோலா லங்­காட் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டாக்­டர் சேவி­யர், இனி தாம் ஒரு சுயேச்சை உறுப்­பி­னர் என்­றும் தேசிய கூட்­டணி (பெரிக் காத்­தான் நேஷ­னல்) அர­சாங்­கத் திற்கு தமது ஆத­ரவு உண்டு என்­றும் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார். "நான் எனது தொகு­தி­யில் தொடர்ந்து பணி­யாற்­று­வேன். கோலா லங்­காட் மக்­க­ளுக்கு நான் வழங்­கிய

தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வேன்," என்­றார் அவர்.

முன்­னாள் கேபி­னட் அமைச்­­ சரான டாக்­டர் சேவி­யர், 1998 முதல் பிகே­ஆர் கட்­சி­யில் பணி­யாற்றி வந்­தார். அண்­மைய அர­சி­யல் நிகழ்வுகளால் தாம் மிக­வும் விரக்தி அடைந்­த­தா­க அவர் கூறி­யுள்­ளார். குறிப்­பாக, கிரு­மிப் பர­வல் வேக­மெ­டுத்த நேரத்­தில் தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்­தது பொருத்­த­மற்­றது என்­றார் அவர்.

கடந்த மாத இறு­தி­யில்­தான் ஜுலாவ், தெப்­ராவ் தொகு­தி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிகே­ஆர் கட்­சி­யி­லி­ருந்து விலகி பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு ஆத­ரவு அளிக்­கப்போவ­தா­கத் தெரி­வித்­த­னர். மூன்று வாரங்களில் மூன்று எம்.பி.க்கள் கட்சி தாவியதன் பின்னணி மர்ம மாக உள்ளது. 2018 பொதுத் தேர்

த­லில் 48 இடங்களில் வென்ற பிகே­ஆர் கட்­சி­வசம் தற்­போது 35 எம்.பி.க்களே உள்­ள­னர்.