நியூசிலாந்து பிரதமர்: முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்

நியூசிலாந்து பிரதமர்: முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்

1 mins read

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தின் கிறைஸ்ட்­சர்ச் நக­ரில் உள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்டு ஈராண்­டு­கள் ஆனதைக் குறிக்­கும் வித­மாக நேற்று நினை­வஞ்­ச­லிக் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டர்ன், நியூ­சி­லாந்­தின் முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு ஆத­ர­வ­ளிக்க நாடு கடமைப்பட்டுள்ளதா­கச் சொன்­னார்.

பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களுடன் நடத்­தப்­பட்ட இந்­தக் கூட்­டத்­தில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கலந்­து­கொண்­ட­னர். 2019 மார்ச் 15ஆம் தேதி ஆயு­த­மேந்­திய துப்­பாக்­கிக்­கா­ரன் ஒரு­வன் இரு பள்ளி­வா­சல்­களில் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 51 பேர் உயி­ரி­ழந்­த­து­டன் மேலும் பலர் காய­முற்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து நியூ­சி­லாந்­தில் ஆயு­தக் கட்­டுப்­பாடு­க­ளைத் திரு­மதி ஆர்­டர்ன் கடு­மை­யாக்­கி­னார்.

அதோடு, துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­களுக்கும் அதில் உயிர் பிழைத்­த­வர்­க­ளுக்­கும் திருமதி ஆர்­டர்ன் இரக்­கம் காட்­டி­யது அவ­ருக்­குப் பாராட்டு­தல்­க­ளைப் பெற்­றுத் தந்­தது.