பெர்சத்து, அம்னோ மோதல்

பெர்சத்து, அம்னோ மோதல்

2 mins read

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பொதுத்­தேர்­தல் எந்த நேரத்­தி­லும் அறி­விக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நேரத்­தில் தற்­போ­தைய ஆட்­சி­யில் முன்­னணி வகிக்­கும் பெர்­சத்­துக் கட்­சிக்­கும் அரசாங் கத்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டே ஆத­ரவு அளித்து வரும் அம்­னோ­வுக்­கும் இடையே மீண்­டும் மோதல் ஏற்­பட்­டுள்­ளது.

வரு­கின்ற பொதுத்­தேர்­த­லில் குறிப்­பிட்ட 13 தொகு­தி­களை ஒதுக்கு­வ­தில் இரு கட்­சி­க­ளுக்கு இடையே சிக்கல் நீடிக்கிறது.

2018ஆம் ஆண்­டில் நடைெபற்ற பொதுத்தேர்­த­லில் அம்னோ படு­தோல்­வி­யைத் தழு­வி­யது.

இந்தச் சூழ்நிைலயில் அக்­கட்­சி­யில் உள்ள 15 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அண்மையில் ஆளும் பெர்­சத்­துக் கட்­சிக்­குத் தாவி­யுள்ளனர்.

இந்த 15 தொகு­தி­களில் 13 இடங்­களில் யார் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய அம்னோவுக்கு பெர்­சத்து அழைப்பு விடுத்தது.

ஆனால் இந்த அழைப்பை புறக்­க­ணித்த அம்னோ, அனைத்து தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டப் போவதாக அறிவித்துள்ளது.

அந்த 15 தொகு­தி­களும் மலாய் தேசிய கட்­சிக்குச் சொந்­த­மா­னவை என்று அம்னோ வலியுறுத்துகிறது.

மலே­சி­யாவை ஆளும் தேசிய கூட்­ட­ணி­யில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்­கிய கட்­சி­க­ளான பெர்­சத்­து­வும் அம்­னோ­வும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இரு கட்­சி­க­ளுக்கு இடை­யிலான தொகுதிப் பங்கீடு குறித்­துப் பேசிய பெர்­சத்­துக் கட்­சி­யின் தேர்­தல் பொறுப்­பா­ளர் அஸ்­மின் அலி, "எஞ்­சிய 209 தொகு­தி­களில் எங்­க­ளுக்கு இடையே எந்தவிதப் பிரச்­சினையும் இல்லை," என்றார்.

ஆனால் 13 தொகு­தி­களில் மட்­டுமே சர்ச்சை நீடிக்­கிறது," என்று அவர் கூறியுள்ளார்.

"அம்­னோ­வும் 13 தொகு­தி­களில் போட்­டி­யிட விரும்­பி­னால் அது பற்றி பேசி தீர்த்­துக்கொள்­ள­லாம்," என்­றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அம்னோவின் தேர்­தல் பொறுப்­பா­ளரான தாஜு­தீன் அப்­துல் ரஹ்­மா­னின் வாதம் வேறு­வி­த­மாக உள்­ளது.

"கட்­சித் தாவி­ய­வர்­க­ளின் அனைத்துத் தொகு­தி­க­ளை­யும் அம்னோ மீண்­டும் கைப்­பற்ற விரும்­பு­கிறது. இதனால் பேசு­வ­தற்கு ஒன்று­மில்லை," என்று அவர் கை விரித்து உள்ளார்.