ஆஸ்ட்ரஸெனகா: ரத்தம் உறைவதற்கு ஆதாரமில்லை

ஆஸ்ட்ரஸெனகா: ரத்தம் உறைவதற்கு ஆதாரமில்லை

1 mins read

லண்­டன்: ஆஸ்ட்ரஸெனகா தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சில­ருக்கு ரத்­தம் உறை­யும் ஆபத்து ஏற்­பட்­ட­தாக தக­வல் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து அந்­தத் தடுப்­பூ­சி­யைப் பயன்­ப­டுத்த சில நாடு­கள் தடை விதித்­துள்­ளன.

ஆனால் கொவிட்-19 தடுப்­பூ­சி­ க­ளைப் போட்­டுக்கொண்­ட­வர் களின் தர­வு­களை ஆராய்ந்­த­தில் ரத்­தம் உறை­வ­தற்­கான ஆதா­ர­மில்லை என்று ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று ஆஸ்ட்ரஸெனகா நிறு­வ­னம் தெரி­வித்­தது.

ஐரோப்­பா­வி­லும் பிரிட்­ட­னி­லும் 17 மில்­லி­யன் பேருக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆஸ்ட்ரஸெனகா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளு­டைய பாது­காப்பு தொடர்­பான தர­வு­கள் ஆரா­யப்­பட்­டன. ஆனால் ரத்­தம் கட்­டு­வ­தற்கோ அல்­லது உறை­வ­தற்கோ எந்­த­வித ஆதா­ர­மும் இல்லை என்று அந்­நிறு­ வ­னம் தெரிவித்தது.

ஐயர்­லாந்து, டென்­மார்க், நார்வே, ஐஸ்­லாந்து மற்­றும் நெதர்­லாந்­தில் ரத்­தம் உறையும் பிரச்­சினை கார­ண­மாக ஆஸ்ட்ரஸெனகா தடுப்­பூ­சி ­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இத்தகைய நடவடிக்கை கொள்ளைநோய் பரவலைத் தடுக்க போதுமான மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் மருத்துவர் நிபுணர் பீட்டர் இங்கிலிஷ் எச்சரித்துள்ளார்.