யங்கூன்: ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள மியன்மாரில் முன்னாள் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சி மீதான வழக்கு விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காணொளி மூலமாக நடைபெறும் விசாரணையில் ஆங் சான் சூச்சி முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மியன்மார் முழுவதும் இணையத் தொடர்பு பாதிக்கப்பட்டதால் சூச்சி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மார்ச் 24ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று சூச்சியின் வழக்கறிஞர் கின் மாவுங் ஸாவ் தெரிவித்தார்.

