யங்கூன்: மியன்மாரில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரே நாளில் குறைந்தது இருபது பேர் உயிரிழந்தனர்.
முக்கிய நகரங்களில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் திங்கள் அன்று ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் குறைந்தது இருபது பேர் பலியானதாக உள்ளூர் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்து.
ஆறு வாரங்களுக்கு முன்பு ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அரசாங்கத் தலைவர்களையும் ராணுவம் சிறையில் அடைத்து வைத்துள்ளது.
தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் ஆங் சான் சூச்சி தங்கம் மற்றும் ரொக்கம் பெற்றதாகவும் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதையும் இதுவரை ராணுவம் வெளியிடவில்லை.
இந்த நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஆங் சான் சூச்சியை விடுவிக்கவும் ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் உண்மையான மற்றும் ரப்பர் தோட்டக்களால் சுட்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள் அன்று நடந்த வன்முறைகளில் இருபது பேர் மாண்டதாக அரசியல் கைதி களின் உதவிச் சங்கம் தெரிவித்தது.
"பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அச்சங்கம் ெதரிவித்தது.
இதற்கிடையே அனைத்துலக சமூகம் வரம்பு மீறி செயல்பட வேண்டாம் என்று ராணுவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐநா, அமெ ரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மியன்மாரில் நடக்கும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரி வித்துள்ளன. இதுவரை குைறந்தது 138 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என ஐநா தெரி வித்தது. அமைதியாக நடந்த ஆர்ப் பாட்டத்தில் பெண்களும் குழந்தை களும் பலியாகியிருப்பதாகவும் ஐநா குறிப்பிட்டது.
ஆனால் அனைத்துலக சமூ கத்தின் வேண்டுகோளை மியன்மார் மதிப்பதாக இல்லை.

