கோலாலம்பூர்: மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம், அம்னோவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியத்தை நிராகரித்துள்ளார்.
கூட்டணி பற்றிய பேச்சு ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்வார், மலாய் தேசிய கட்சியுடனான கூட்டணி சாத்தியம் குறித்து இப்போது பேச முடியாது என்றார்.
"அடுத்த பொதுத்தேர்தலுக்கான கூட்டணி வாய்ப்புகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆலோசனை மட்டுமே நடத்தியுள்ளோம்," என்று அன்வார் குறிப்பிட்டார்.
அண்மையில் அன்வார் இப்ராஹிமின் கெஅடிலான் கட்சியிலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்.
அப்போதும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் மீண்டும் நேற்று கூறியுள்ளார்.

