'அஸ்ட்ராஸெனகாவை நிறுத்த வேண்டாம்'

'அஸ்ட்ராஸெனகாவை நிறுத்த வேண்டாம்'

1 mins read

ஜெனீவா: அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சியை நிறுத்த வேண்­டாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் நேற்று கேட்­டுக்கொண்­டது.

அந்­தத் தடுப்­பூசி பக்க விளை­வு­கள் ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி ஐயர்­லாந்து, நெதர்­லாந்து உள்­ளிட்ட நாடு­கள் தடை விதித்­துள்­ள­தால் உலக அமைப்பு இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்­ளது.

ஆனால் பக்க விளை­வு­கள் ஏற்­ப­டுத்­து­வதாக நிரூ­பிக்­கப்­பட்ட ஆதா­ரம் எது­வும் இல்லை என்று உலக சுகா­தார அமைப்பு கூறியது.

அஸ்ட்­ரா­ஸெ­னகா நிறு­வ­ன­மும் உலக நாடு­களில் 17 மில்­லி­யன் மக்­க­ளுக்குப் போடப்­பட்­டுள்ள தடுப்­பூ­சி­களில் இது­வரை பக்க விளை­வு­கள் ஏற்­பட்­ட­தாக தக­வல் இல்லை என்று தெரிவித்தது.

இதற்­கி­டையே ஜெர்­மனி, இத்­தாலி, ஃபிரான்ஸ் ஆகிய நாடு­களும் அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சிக்கு இடைக்­கா­லத் தடை விதிக்­கப் போவ­தாக அறி­வித்­துள்­ளன.

தாய்­லாந்து அர­சாங்­கம் திட்­ட­மிட்­ட­படி அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூசி மக்­க­ளுக்கு போடப்­படும் என்று கூறியுள்ளது. இந்­தோ­னீ­சியா காத்­தி­ருக்­கப் போவ­தாக தெரிவித்தது.