கொவிட்19 கொள்ளைநோய் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி ஐநா
ஜெனிவா: முதியோரை ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது, அவர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் நடந்துகொள்வது உலகெங்கிலும் உள்ள பொதுவான நிலைமை.
எனினும், இந்தப் போக்கு கொரோனா கொள்ளைநோய் காலத்தில் மிகவும் மோசமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறி
யுள்ளது.
கொரோனா கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி முதியோரிடம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகம் இதிலிருந்து மீண்டு வர பல தலைமுைறயினரிடையே ஒருங்கிைணந்த செயல்பாடு அவசியம் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.
முதியோருக்கு எதிரான பாரபட்சமான போக்கு சமுதாயத்தில் பரவிக் கிடப்பதாகவும் அது அவர்களை மட்டுமே பாதிக்கக்கூடியது அல்ல என்றும் நான்கு ஐநா அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
இதில் குறிப்பாக, வேலையிடங்களில் இளையர், முதியோர் என இரு பிரிவினரும் பாதகமான சூழலை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை விளக்கியது.
இந்தப் பிரச்சினை சுகாதாரம், சமூகப் பராமரிப்பு, ஊடக, சட்ட நடைமுறைகள் போன்றவற்றிலும் நிலவுவதாக அறிக்கை சுட்டியது.
"முதியோருக்கு எதிரான பாரபட்சமான போக்கு என்பது அனைத்து அமைப்புகள், சட்டம், நாட்டின் கொள்ைககள் என உலகம் முழுவதும் பரவலாகக் காணப்
படுகிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்ட திரு குட்டரஸ், "இவை அவர்களுக்கு மனித உரிமைகளை மறுப்பதுடன் அவர்கள் தங்களின் முழு ஆற்றலை அடைய முடியாத நிலையையும் ஏற்படுத்துகின்றன," என்றார்.
உலக சுகாதார அமைப்பு, ஐநா மனித உரிமை அலுவலகம், ஐநா பொருளியல், சமூக விவகார அமைப்பு, ஐநா மக்கள்தொகை நிதியம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த 203 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளது.
அதில் முதியோருக்கு எதிரான பாரபட்சமான போக்கு, அவர்களை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் காண்பது, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனப்போக்குகள் ஆகியவற்றுடன் வெளிப்படையாக அவர்களை ஒதுக்குவது எனப் பல வழிகளில் வெளிப்படலாம் என்று கூறுகிறது.
கொரோனா கொள்ளைநோய் பரவுவதற்கு முன்னரே இது ஒரு ெபரிய பிரச்சினையாக இருந்துள்ளது என்றும் கொள்ளைநோய் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸும் மற்ற மூன்று அமைப்புகளின் தலைவர்களும் அந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

