மியன்மாரில் அமைதி திரும்ப ஆசியான் உதவ வேண்டும்

மியன்மாரில் அமைதி திரும்ப ஆசியான் உதவ வேண்டும்

2 mins read

உயர்மட்டக் கூட்டம் கூட்டி விவாதிக்க இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்­கோவி அழைப்பு

ஜகார்த்தா: மியன்­மா­ரில் வன்­முறை சம்­ப­வங்­களை முடி­வுக்­குக் கொண்­டு­வந்து அங்கு ஜன­நா­ய­கம், அமைதி, நிலைத்­தன்­மையை உரு­வாக்க ஆசி­யா­னின் உயர்­மட்­டத் தலை­வர்­கள் ஒன்­று­கூடி விவா­திக்க வேண்­டும் என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்ேகா விடோடோ அழைப்பு விடுத்­துள்­ளார்.

இதன்­தொ­டர்­பில், ஆசி­யான் அமைப்­பின் தலை­மைப் பொறுப்பை ஏற்­றி­ருக்­கும் புருணை மன்­னர் ஹச­னல் போல்­கி­யா­வு­டன் தாம் பேச­வுள்­ள­தா­க­வும் அவர் மேற்கு ஜாவா­வில் உள்ள அதி­பர் மாளி­கை­யி­லி­ருந்து வெளி­வ­ரும் வானொலி அறி­விப்­பின் மூலம் திரு ஜோக்­கோவி நேற்று தெரி­வித்­தார். மியன்­மார் நில­வ­ரம் குறித்து ஆசி­யா­னின் உயர்­மட்­டத் தலை­வர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிப்­பது குறித்து தாம் புருணை மன்­ன­ரு­டன் பேசப் போவ­தாக அவர் சொன்­னார்.

மியன்­மா­ரில் பேச்­சு­வார்த்­தை­யின் மூலம் அமை­தி­யை­யும் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­று­சே­ரு­வ­தை­யும் நிலை­நாட்டி அங்கு உட­ன­டி­யாக ஜன­நா­ய­கம், அைமதி, நிலைத்­தன்மை ஆகி­ய­வற்றை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வது முக்­கி­யம் என்று அவர் கூறி­னார்.

அத்­து­டன், பிப்­ர­வரி 1ஆம் தேதி நிகழ்ந்த ஆட்­சிக்­க­விழ்ப்­பிற்கு பின் ஏற்­பட்ட ராணுவ ஒடுக்­கு­முறை நட­வ­டிக்­கை­களில் மாண்­டோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு தமது அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக் ெகாண்­டார் திரு ஜோக்­கோவி.

முன்­ன­தாக, இம்­மா­தம் 2ஆம் தேதி ஆசி­யான் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் இணை­யம் வழி அதி­கா­ர­பூர்­வ­மற்ற கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு மியன்­மார் குறித்து விவா­தித்­த­னர். அதில், மியன்­மார் ராணு­வம் வன்­மு­றை­யைக் கைவிட்டு மக்­கள் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­த­னர். மேற்­கத்­திய நாடு­கள் வெளிப்­ப­டை­யாக மியன்­மார் ராணுவ ஆட்­சி­யைக் கண்­டித்­த­தைப் போல் ஆசி­யான் நடந்­து­கொள்­ள­வில்லை என்­பது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

இதற்­கி­டையே, மியன்­மா­ரின் ராணுவ அடக்­கு­மு­றை­யின்­கீழ் பொது­மக்­கள் பலி­யா­வது அதி­க­ரித்து வரும் நிலை­யில் உலக நாடு­கள் இதற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­ய­வில்லை என்று ஜப்­பா­னில் வெளி­யா­கும் யோமி­யூரி ஷிம்­புன் என்ற பத்­தி­ரிகை கருத்­துத் தெரி­வித்­துள்­ளது.

அந்­நாட்டு ராணு­வம் சற்­றும் தயங்­கா­மல் பொது­மக்­கள் மீது கண்­ட­படி துப்­பாக்­கிச்­சூடு நடத்­து­வ­தா­கக் கருத்­து­ரைத்த அந்­தப் பத்­தி­ரிகை, இம்­மா­தம் 14, 15ஆம் தேதி­களில் மட்­டும் 90 பேருக்கு மேல் மாண்­டு­விட்­ட­தா­கக் கூறு­கிறது. மியன்­மா­ரின் ஆகப் பெரிய நக­ர­மான யங்­கூ­னின் சில பகு­தி­களை ராணு­வம் தனது முழுக் கட்­டுப்­பாட்­டில் எடுத்­துக்­கொண்­டுள்­ள­தா­க­வும் மியன்­மார் ராணு­வம் தோற்­று­விக்­கப்­பட்ட நினைவு நாளான மார்ச் 27ஆம் தேதிக்­குள் ஆர்ப்­பாட்­டங்­களை முழு­வ­து­மாக ஒடுக்க அது எண்­ணம் கொண்­டுள்­ள­தா­க­வும் யோமுரி ஷிம்­புன் கூறி­யுள்­ளது.