தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரிய நட்புமுறிவால் ஒரு பாதிப்பும் இல்லை: மலேசியா

1 mins read

அராவ்: தூத­ரக உறவை முறித்­துக்­கொள்­ளும் வட­கொ­ரி­யா­வின் முடி­வால் மலே­சி­யா­வுக்கு எவ்­வி­தப் பாதிப்­பும் ஏற்­ப­டாது என்று மலே­சிய நிதி அமைச்­சர் ஸஃப்ருல் அப்­துல் அஸிஸ் தெரி­வித்­துள்­ளார்.

மலே­சி­யப் பொரு­ளி­ய­லில் வட­கொ­ரி­யா­வின் பங்­க­ளிப்பு மிகச் சிறி­யது என்று அவர் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். முன்­ன­தாக, கோலா­லம்­பூ­ரில் உள்ள வட­கொ­ரிய தூத­ர­கத்­தை­விட்டு அனைத்து அதி­கா­ரி­களும் ஊழி­யர்­களும் 48 மணி நேரத்­தில் வெளி­யேற வேண்­டும் என மலே­சியா நேற்று முன்­தி­னம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

முன் சோல்-மியோங் என்­னும் வட­கொ­ரிய நாட்­ட­வரை மலே­சியா வெளி­யேற்­றி­ய­தன் தொடர்­பில் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் சர்ச்சை மூண்­டது. கள்ளப் பண விவகாரம் தொடர்பில் இவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.