கோலாலம்பூர்: சிங்கப்பூரிலுள்ள மலேசியத் தூதரக நெரிசலுக்குத் தீர்வு காணப்படும் என்று மலேசிய குடிநுழைவுத் துறை நேற்று தெரிவித்தது. அரச மலேசிய சுங்கத் துறையுடன் இணைந்து எட்டு அதிகாரிகள் தூதரகத்திற்கு அனுப்பப் படுவார்கள் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் ஸைமீ தாவுத் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகளை வேகப்
படுத்த இதுபோன்ற புதிய நடவடிக்கைகள் வரும் வாரத்தில் தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"தற்போது தூதரகத்தில் ஐந்து அதிகாரிகள் உள்ளனர். அவர்
களுக்கு உதவ மேலும் எட்டு அதிகாரிகள் அங்கு அனுப்பப்படுவார்கள். நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் அவர்.
பாஸ்போர்ட் அச்சிடும் இயந்திரம் ஒன்று சேதமுற்றதும் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என திரு கைருல் ஸைமீ குறிப்பிட்டார்.
மேலும், இணையம் மூலம் முன்
பதிவு செய்யாமல் பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பங்களுடன் நேரில் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததும் தூதரகம் முன்பு வரிசை நீண்டதற்குக் காரணம் என வும் அவர் கூறினார்.

