தடுப்பூசி சந்தேகம்: விஞ்ஞானிகள் ஆய்வு

தடுப்பூசி சந்தேகம்: விஞ்ஞானிகள் ஆய்வு

1 mins read

சிகாகோ: ஆஸ்ட்­ரா­ஸெ­னகா கொவிட்-19 தடுப்­பூசி போட்ட சில நாள்­க­ளுக்கு அல்­லது வாரங்­க­ளுக்­குப் பிறகு மூளை­யில் அரிய வகை ரத்த உறைவு ஏற்­பட்­டுள்­ள­தாக குறைந்­தது 18 சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன. இதை­ய­டுத்து, அதற்­கான கார­ணம் குறித்து விஞ்­ஞா­னி­கள் ஆராய்ந்து வரு­கின்­ற­னர். சில­ரி­டத்­தில் அதி­க­ளவு நோயெ­திர்ப்­புப் பொருளை அந்­தத் தடுப்­பூசி தூண்­டி­வி­டு­வ­தாக ஐரோப்­பிய ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ரத்­தம் உறை­த­லுக்­கும் கருத்­தடை மாத்­தி­ரை­க­ளுக்­கும் தொடர்­புள்­ளதா என்­றும் ஆரா­யப்­பட்டு வரு­கிறது. ஆயி­னும், அதற்கு இன்­னும் உறு­தி­யான சான்று கிடைக்­க­வில்லை என்­பது விஞ்­ஞா­னி­கள் பல­ரது கருத்­து.

அதே வேளை­யில், மற்ற தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொண்­டோ­ரி­டம் இத்­த­கை­ய­தொரு புகார் எழ­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பாதிக்­கப்­பட்­டோ­ரில் அதி­க­மா­னோர் பெண்­கள் என்­றும் பெரும்­பா­லான சம்­ப­வங்­கள் ஐரோப்­பா­வில் பதி­வாகி இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்

­பூ­சியை அவ­ச­ர­கா­லத்­தில் பயன்­

ப­டுத்த 70 நாடு­கள் அனு­ம­தித்­துள்­ளன. ஆனா­லும், அமெ­ரிக்கா இன்­னும் அந்­தத் தடுப்­பூ­சிக்கு ஒப்­பு­தல் வழங்­க­வில்லை.