மியன்மாரில் சுகாதார ஊழியர்கள் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் சுகாதார ஊழியர்கள் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்

1 mins read

யங்கூன்: மியன்­மா­ரின் மத்­திய மண்­டலே நக­ரில் நேற்று மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் குதித்­த­னர். அவர்­கள் பெரும் எண்­ணிக்­கை­யில் வீதி­களில் கூடினர். இருந்­தா­லும் பாது­காப்­புப் படை­யி­ன­ரு­டன் அவர்­கள் மோதலை தவிர்த்­துக்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மியன்­மா­ரில் சென்ற மாதம் ஜன­நா­யக ஆத­ர­வுத் தலைவி சூச்சி அம்­மை­யா­ரைக் கைது­செய்­து­விட்டு ஆட்­சியை ராணு­வத் தலை­வர்­கள் கைப்­பற்­றிக்கொண்­ட­னர்.

அதனை அடுத்து அந்த நாட்டில் பர­வ­லாக ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன. இது­வரை ஏறத்­தாழ 250 பேர் கொல்­லப்­பட்டு விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது. இருந்­தா­லும் மரண எண்­ணிக்கை இன்­னும் அதி­க­மாக இருக்­கும் என்று தெரி­கிறது. ஏறக்­கு­றைய 2,500 பேர் கைதாகி உள்­ள­தா­க­வும் அர­சி­யல் கைதி­க­ளுக்­கான உத­விச் சங்­கம் என்ற அமைப்பு தெரி­விக்­கிறது.

மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர் களும் ராணு­வத்­தி­ன­ரும் இரண்­டில் ஒன்று பார்த்­து­வி­டும் பாணி­யில் செயல்­பட்­டு­வ­ருவதா­கத் தெரி­கிறது என்று ஊட­கங்­கள் கூறு­கின்­றன.

மியன்­மார் ராணுவ ஒடுக்­கு­முறை களை அனைத்­து­லக நாடு­கள் கண்­டித்து வரு­கின்­றன என்­றா­லும் இரத்­தக்­க­ளரி நிற்­க­வில்லை.

இத­னி­டையே, மியன்­மார் ராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் 11 பேருக்கு எதி­ராக பல்­வேறு தடை­களை விதிக்க ஐரோப்­பிய ஒன்­றி­யம் நேற்று அங்­கீ­கா­ரம் வழங்க இருந்­தது.