கோலாலம்பூரில் வடகொரிய தூதரகம் காலியானது

கோலாலம்பூரில் வடகொரிய தூதரகம் காலியானது

1 mins read
6137c939-93f9-433f-9ce2-ed041eae65ac
கோலாலம்பூரில் உள்ள வட கொரிய தூதரக ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து நேற்று தூதரகத்திலிருந்து வெளியேறியது. படம்: தி ஸ்டார்/ ஆசியா நியூஸ் நெட்வொர்க் -

கோலா­லம்­பூர்: கோலா­லம்­பூ­ரில் செயல்­பட்டு வந்த வட­கொ­ரிய தூத­ர­கம் மூடப்­பட்­டதை அடுத்து நேற்று ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்தை காலி செய்­த­னர்.

மலே­சியா அர­சாங்­கம் செய்த காரி­யத்­திற்குத் தொடர் விளை­வு­களை அந்த நாடு சந்­திக்க வேண்டி இருக்­கும் என்று வட­கொ­ரிய தூதர் கிம் யு சோங் அந்த அலு­வ­ல­கத்தை­விட்டு வெளி­யே­று­வ­தற்கு முன் விடுத்த அறிக்கை தெரி­வித்­தது.

வட­கொ­ரி­யாவைச் சேர்ந்த முன் சோல் மியோங் என்­ப­வரை அமெ­ரிக்­கா­வுக்கு நாடு கடத்­தும்­படி கோலா­லம்­பூர் நீதி­மன்­றம் இம்மாதத் தொடக்­கத்­தில் உத்­த­ரவிட்டது.

முன் சோல் மியோங், கள்­ளப்­பண விவ­கா­ரம் தொடர்­பில் பல குற்­றச்­சாட்­டு­களை அமெ­ரிக்­கா­வில் எதிர்­நோக்கி இருக்­கி­றார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து மலே­சி­யா­வு­டன் கூடிய அர­ச­தந்­திர உற­வு­க­ளைத் துண்­டிக்­கப்­போ­வ­தாக வட­கொ­ரியா அறி­வித்­தது. அதை மலே­சியா கண்­டித்­தது. இதைத் தொடர்ந்து, குடும்­பத்­து­டன் வெளி­யே­றும்­படி கோலா­லம்­பூ­ரில் செயல்­படும் தன்­ தூத­ரக ஊழி­யர்­கள் அனை­வ­ருக்கும் வட­கொ­ரியா உத்­த­ர­விட்­டது. முன் 2019ல் கைதானார்.

சட்­ட­விரோ­த­மாக பல பொருட்­களை வட­கொ­ரி­யா­வுக்கு அனுப்பு­வதற்கு ஆத­ர­வாக மோசடி பத்­தி­ரங்­களையும் கள்­ளப் பணத்தையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார் என்று அமெ­ரிக்கா கூறு­கிறது.