பிலிப்பீன்சில் தொற்று மோசமடைகிறது; தேவாலயங்கள் மூடப்பட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது

பிலிப்பீன்சில் தொற்று மோசமடைகிறது; தேவாலயங்கள் மூடப்பட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது

1 mins read
08d80835-62e2-430e-bc61-1b3b8245aed6
-

மணிலா: பிலிப்­பீன்­சில் கிரு­மித் தொற்று அதி­க­ரித்­துள்­ள­தால் புதிய கட்­டுப்­பா­டு­களை அரசு அறிமுகப்படுத்தியது. தலை­ந­கர் மணி­லா­வில் தேவா­ல­யங்­களை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. உண­வ­கங்­களில் உணவு உண்­ப­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மூன்று நாட்­க­ளாக அன்­றாட புதிய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து 7,000ஐ தாண்டி வரு­கிறது.

கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து 663,000 பேருக்கு மேல் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளுக்கு போது­மான படுக்­கை­கள் இல்லை.

தற்­போது பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் மணி­லா­வில் வசிப்பவர்கள்.

அந்த நக­ரில் 12 மில்­லி­யன் பேர் ஏழ்­மை­யி­லும் மக்­கள் நெரி­சல்­மிக்க பகு­தி­க­ளி­லும் வசித்து வரு­கின்­ற­னர்.

"கிரு­மித்­தொற்று பர­வ­லைத் தடுப்­பதே எங்­களின் முதல் இலக்கு," என்று அதி­ப­ரின் பேச்­சா­ளர் ஹாரி ரோக் குறிப்­பிட்­டார்.

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு புதிய விதி­முறை அம­லில் இருக்­கும் என்­று அவர் தெரி­வித்­தார்.

பொதுப்­ போக்­கு­வ­ரத்து தொடர்ந்து செயல்­படும். நாட்­டின் பொரு­ளி­யல் நக­ர­மான மணி­லாவை முற்­றி­லும் முடக்­கு­வ­தற்­குப் பதி­லாக ஊழி­யர்­கள் வழக்­கம்­போல பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர்.

ஆனால் தேவை­யற்ற பய­ணங்­களுக்கும் வட்­டா­ரத்­துக்கு வெளியே செல்­லவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.