அமெரிக்காவின் கொலாராடோவில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவின் கொலாராடோவில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலி

2 mins read
934c5b7d-5294-4b83-b707-2a118abbd315
-

டென்­வர்: அமெ­ரிக்­கா­வின் கொலா­ராடோ மாநி­லத்­தின் போல்­டர் பகு­தி­யில் உள்ள ஒரு பேரங்­கா­டி­யில் நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் பத்­துப் பேர் கொல்­லப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின் பேரில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணிக்கு 'கிங் சூப்­பர்ஸ்' என்­னும் பேரங்­காடி­யில் நடந்த இந்­தத் துப்­பாக்­கிச் சூட்­டின் நோக்­கம் என்ன என்­பது குறித்த விவ­ரங்­கள் தெரி­ய­வில்லை. இந்­தச் சம்­ப­வம் நடந்த இடம் டென்­வர் நக­ரின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் 45 கி.மீ., தொலை­வில் உள்­ளது. இந்­தத் துப்­பாக்­கிச் சூட்­டில் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­தாக போல்­டர் போலிஸ் துறைத் தள­பதி கெர்ரி யாமாகுச்சி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

சம்­ப­வத்­தில் மாண்ட போலிஸ் அதி­காரி எரிக் டேலி என்­ப­வ­ருக்கு வயது 51 என்­றார், போல்­டர் போலிஸ் துறை தலை­வர் மாரிஸ் ஹெரோல்ட்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் துப்­பாக்­கிச் சூட்­டிற்கு பலி­யா­ன­வர்­க­ளின் விவ­ரங்­கள் குறித்து பின்­னர் அறி­விக்­கப்­படும் என்றும் கூறி­னார்.

சந்­தே­கத்­தின்­பே­ரில் கைது­செய்­யப்­பட்டு போலிஸ் விசா­ர­ணை­யில் இருக்­கும் ஆட­வர், இந்­தச் சம்­ப­வத்­தில் மோச­மா­கக் காய­ம­டைந்­துள்­ளார். எனவே, அவ­ரி­டம் இருந்து எவ்­வி­தத் தக­வ­லும் இப்­போது பெற­மு­டி­ய­வில்லை என்று போலிஸ் தரப்­பில் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அந்­தச் சம்­ப­வம் குறித்து சிசி­டி­வி­யில் பதி­வான காட்சி­கள் தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டன. மேல் சட்டை அணி­யாத நிலை­யில், பாக்­சர் காற்­சட்டை அணிந்து தாடி­யு­டன் காலில் ரத்தம் வடிய காணப்­பட்ட ஆட­வர் ஒரு­வரை விலங்­கிட்டு போலிஸ் அழைத்­துச் செல்­லும் காட்­சியை அந்­தக் காணொ­ளி­யில் காண­மு­டிந்­தது. அட்­லாண்­டா­வில் மார்ச் 16ஆம் தேதி உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் எட்டு பேர் கொல்­லப்­பட்­ட­னர். இது நடந்து ஒரு வாரத்­திற்­குள் கொலாராடோ துப்­பாக்­கிச் சூடு நடந்­துள்­ளது.

இந்த ஏழு நாட்­க­ளுக்­குள் ஏழு தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. மார்ச் 17ல் கலி­ஃபோர்­னி­யா­வின் ஸ்டாக்­ட­னில் நடந்த தாக்­கு­தலில் 5 பேர் கொல்­லப்­பட்­ட­னர். மார்ச் 18ல் ஒரி­கோ­னின் கிரி­ஷாமி, மார்ச் 20ல் ஹுஸ்­டன், டல்­லாஸ், ஃபிளடெல்ஃபியா ஆகிய இடங்­க­ளி­லும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன.