16 டன் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

16 டன் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

2 mins read
a0add419-4caa-4b37-b909-a2a065494d0f
சிலாங்கூரில் உள்ள சங்கத்துறை தலைமையகத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களுடன் கடத்தல் முறியடிப்பு குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்குகின்றனர். படம்: மலேசிய சுங்கத்துறை ஃபேஸ்புக் -

நெகிரி செம்­பி­லான்: மலே­சி­யத் துறை­மு­கத்­தில் அந்­நாட்டு சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் மிகப்­பெ­ரிய அள­வி­லான போதைப்­பொ­ருள் கடத்­தலை முறி­ய­டித்­துள்­ள­னர். நேற்று 5.2 பில்­லி­யன் ரிங்­கிட் (S$1.7 பில்­லி­யன்) மதிப்­புள்ள 94.8 மில்­லி­யன் 'கேப்­ட­கன்' போதை மாத்­தி­ரை­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

சிலாங்­கூ­ரின் கிள்­ளான் துறை­மு­கத்­தில் கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருள்­க­ளின் மொத்த எடை 16 டன் என்று சுங்­கத்­து­றை­யின் நிர்­வாக இயக்­கு­நர் அப்­துல் லத்­திஃப் அப்­துல் காதிர் தெரி­வித்­தார்.

எப்­போ­தும் இல்­லாத வகை­யில் போதைப்­பொ­ருள் கடத்­தல் சம்­பவ முறி­ய­டிப்­பில் இது மிகப்­பெ­ரிய வெற்­றி­யா­கும் என்று திரு காதிர் கிள்­ளா­னில் உள்ள சுங்­கத்­துறை தலை­மை­ய­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

உலக அள­வில் போதைப்­பொருள்­களை விநி­யோ­கித்து விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளின் நட­வ­டிக்­கை­கள் இதன்­மூ­லம் முடக்­கப்­பட்­டுள்­ளது என்று திரு காதிர் தெரி­வித்­தார்.

தள்­ளு­வண்­டி­க­ளின் டயர்­களில் ஒளித்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­தப் போதைப்­பொ­ருள் சரக்­கு­கள் தூரக்­கி­ழக்கு நாடு­களில் ஒரு நாட்­டுக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்­தாக அவர் கூறி­னார்.

மலாக்கா நீரி­ணை­யில் உள்ள மலாக்கா துறை­மு­கம் மலே­சி­யா­வின் ஆகப்­பெ­ரிய துறை­மு­க­மா­கும். இந்­தத் துறை­மு­கத்­திற்கு மத்­திய கிழக்­கில் இருந்து சரக்­குக் கப்­பல் ஒன்று வந்­தது. அந்­தக் கப்­ப­லில் இருந்து இறக்­கப்­பட்ட கொள்­க­லன்­களை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்ட­போது 12 மீட்­டர் நீள­முள்ள மூன்று கொள்­க­லன்­களில் ஏராளமான போதைப்­பொருட்­கள் ஒளித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரியவந்­தது. மிகப்­பெ­ரிய அள­வில் போதைப்­பொ­ருட்­கள் கடத்­தப்­ப­டு­வது குறித்து சவூதி அரே­பியா மலே­சி­யா­வுக்­குத் துப்­புக்­கொ­டுத்­த­தன் மூலம் இந்­தக் கடத்­தல் சம்­ப­வம் முறி­ய­டிக்­கப்­பட்­டது என்­றும் அதற்­காக அந்த நாட்­டுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­வ­தா­க­வும் திரு காதிர் தெரி­வித்­தார். இந்த கடத்­தல் முறி­ய­டிப்­புச் சம்­ப­வத்­தில் இது­வ­ரை­ ஒரு­வ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரி­வித்­தார்.