சூயஸ் கால்வாயில் சிக்கிய 400 மீட்டர் நீள கப்பல்

சூயஸ் கால்வாயில் சிக்கிய 400 மீட்டர் நீள கப்பல்

1 mins read
0a135f30-0a58-4911-bfc1-e5dc549d6aa0
உலகின் முக்கிய நீர்வழிப் பாதையை அடைத்துக்கொண்ட 400 மீட்டர் நீள கப்பல். படம்: ஏஎஃப்பி -

கெய்ரோ: உல­கின் பர­ப­ரப்­பான நீர் வழிப் பாதை­யான சூயஸ் கால்­வா­யில் பெரிய கொள்­க­லன் கப்­பல் சிக்­கிக் கொண்­ட­தால் அவ் ­வ­ழி­யா­கச் சென்ற கப்­பல்­கள் பழைய கால்­வாய்க்குத் திருப்பி விடப்­பட்­டன.

நானூறு மீட்­டர் நீள­முள்ள சரக்­குக் கப்­பல் கால்­வா­யின் குறுக்கே சிக்­கி­யது. இத­னால் நூற்­றுக்­கும் மேற்­பட்ட கப்­பல்­கள் அந்­தப் பாதை வழி­யா­கச் செல்ல முடி­யா­மல் தத்­த­ளித்­தன என்று கப்­பல் நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சீனா­வி­லி­ருந்து பொருட்­களை ஏற்­றிக் கொண்டுவந்த 'எவர் கிவென்' எனும் அந்­தக் கப்­பல் ரோட்­டர்­டாமை நோக்­கிச் சென்­ற­போது தரை­தட்­டி­யது.

இதற்கு மோச­மான பரு­வ­நிலை கார­ண­மாக இருக்­க­லாம் என கூறப்­ப­டு­கிறது.

இழு­வைப் பட­கு­கள் அதனை மீண்­டும் மிதக்க வைக்­கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டதாக சூயஸ் கால்­வாய் பாதையில் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­களில் ஒன்­றான லேத் ஏஜென்­சிஸ் தெரி­வித்­தது.