ஆஸ்திரேலியாவில் வெள்ளம் வடிந்து வீடு திரும்பும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் வெள்ளம் வடிந்து வீடு திரும்பும் மக்கள்

2 mins read
e2677713-6cb1-452d-95fe-8784c6f84f5b
சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால்முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர். வெள்ளநீர் தங்கள் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க வீட்டிற்கு முன்பு மணல் மூட்டைத் தடுப்புகளை வைக்கும் பணியில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிழக்­குப் பகு­தி­களில் தொடர்ச்­சி­யான கன­ம­ழை­யும் அதன் கார­ண­மாக ஏற்­பட்ட கட்­டுக்­க­டங்கா வெள்­ள­மும் சவுத்வேல்ஸ் மாநில மக்­களை சொல்­லொ­ணாத் துய­ரத்­தில் ஆழ்த்­தி­யது.

ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்­கள் வீடு­களை, உட­மை­களை விட்டு, பிள்ளை குட்­டி­கள், செல்­லப்­பி­ரா­ணி­கள், மூத்தோர் என தத்­தம் குடும்­பத்­தி­னரை வெள்­ளத்­தில் இருந்து பாது­காக்க படா­த­பாடு­பட்­ட­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிழக்­குப் பகு­தியைச் சேர்ந்த பல நக­ரங்­களில் வீடு­கள், சாலை­கள், பாலங்­கள், விவ­சாய நிலங்­கள் ஆகியவை நீரில் மூழ்­கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்­கள் வாழ்­வா­தா­ரத்தை இழந்து தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஐம்­பது ஆண்­டு­கள் காணாத அள­வுக்குப் பெய்த கனமழை­யா­லும் கரை­பு­ரண்டு ஓடிய வெள்­ளத்­தா­லும் 40,000க்கு மேற்­பட்ட மக்­கள் வசிப்­பி­டங்­களை விட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு ஓடும் நிலை ஏற்­பட்­டது. இரண்டு பேர் வெள்­ளத்­தில் மூழ்கி மாண்­ட­னர். அவர்­கள் ஓட்­டிச் சென்ற வாக­னங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­ய­தால் அவர்­கள் உயி­ரி­ழக்­கும் நிலை ஏற்­பட்­டது.

ஐந்து நாட்­க­ளாக விடா­மல் பெய்த மழை­யால் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கால் ஆற்­றின் அணை உடைந்து வசிப்­பி­டங்­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­தது.

இந்­நி­லை­யில் மக்­கள் சற்­றுப் பெரு­மூச்சு விடும் வகை­யில், அவர்களை அச்­சு­றுத்­தி வந்த கன மழை ஓய்ந்து வானம் தெளி­வான நிலை­யில் காணப்­ப­டு­கிறது. சில பகு­தி­களில் வெள்­ளம் வடிந்­துள்­ள­தால் முகாம்­களில் தங்­கி­யி­ருந்த மக்­கள், வீடு திரும்­பத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இத­னை­ய­டுத்து வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளைச் சுத்­தம் செய்­யும் பணியை அதி­கா­ரி­கள் முடுக்­கி­விட்­டுள்­ள­னர். இருப்­பி­னும் ஆற்­றோ­ரம் உள்ள நீர்ப்­பி­டிப்பு நிலப்­ப­கு­தி­களில் தேங்­கிய நீர் இன்­னும் வடி­ய­வில்லை. அத்­து­டன் அப்­ப­கு­தி­களை நோக்கி வெள்ள நீர் வந்த வண்­ணம் உள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் புதிய எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். அத்­து­டன் சில பகுதிகளில் ஆறு­கள் நிரம்பி அணை உடை­யும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக நேற்று ஊட­கங்­கள் தெரி­வித்­தன. குறிப்­பாக சவுத்­வேல்ஸ் மாநில மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். இப்­போது வானம் தெளிந்த நிலை­யில் கதி­ர­வன் ஒளி பரப்­பி­னா­லும் நாம் ஆபத்­தான கட்­டத்தை இன்­னும் தாண்­ட­வில்லை என்று ஆஸ்­தி­ரே­லிய வானிலை நிலை­யம் ஓர் அறிக்­கை­யில் எச்சரித்துள்ளது. மோரீ நக­ரின் மெஹி ஆற்றின் வெள்­ள­நீர்ப் பெருக்­கு அந்த நக­ரையே இரண்டாகப் பிரித்துவிட்டது.

மெஹி ஆற்­றில் தண்­ணீர் நிலை 10.4 மீட்­டர் அளவை எட்­டக்­கூ­டும் என்­றும் அத­னால் வெள்­ளம் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தா­க­வும் வானிலை நிலை­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.