பேங்காக்: தாய்லாந்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்ெகாண்டு புக்கெட் தீவுக்கு வரும் பயணிகள் தனித்திருக்க வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வருகையை ெபரிதும் நம்பியிருக்கும் தாய்லாந்தின் இந்த முடிவு நாட்டை திறந்துவிடுவதன் முதல் அறிகுறி என்று புளூம்பெர்க் செய்தித் தகவல் கூறுகிறது.
தாய்லாந்தில் நேற்று பிரதமர் சான் ஓ சா தலைமையில் கூடிய பொருளியல் குழு நாட்டில் பயணிகளை வரவேற்பதற்கு ஏதுவாக புக்ெகட் தீவில் வசிக்கும் குறைந்தது 70% மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றது. அந்தக் கோரிக்கையை நாட்டின் தனியார் துறையும் வர்த்தகக் குழுமங்களும் முன்வைத்தன. தாய்லாந்தின் மற்ற பகுதிகளையும் பயணிகளுக்கு திறந்துவிடுவதற்கு முன் அந்தத் திட்டத்தை புக்கெட் தீவில் பரிசோதித்துப் பார்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி விளக்கியது.
இதற்குப் பின் மற்றொரு உல்லாசத் தளமான கோ சமுயி தீவையும் தாய்லாந்து பயணிகளுக்கு திறந்துவிடும் எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன்மூலம் கடந்த ஓராண்டாக வழக்கமாக தாய்லாந்துக்கு வருகை தரும் மில்லியன் கணக்கிலான பயணிகள் வராத காரணத்தால் அந்நாட்டின் பயணத் துறை படு வீழ்ச்சி கண்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவ ஆரம்பிப்பதற்கு முன் தாய்லாந்தின் பொருளியலுக்கு பயணத்துறையின் பங்கு 20 விழுக்காடாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தின் இந்த முடிவால் புக்கெட் தீவு மற்ற பகுதிகளைவிட மூன்று மாதம் முன்னரே திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.

