செய்-திக்-கொத்து

செய்-திக்-கொத்து

2 mins read
88410f74-8509-43cf-a007-9f9d30b12d82
-

ஆங் சான் சூச்சி கட்சி

அலு­வலகம் மீது குண்­டு­வீச்சு

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணு­வத்­தி­டம் ஆட்­சியை இழந்த நிலை­யில், அவ­ரது கட்சி அலு­வ­ல­கம் மீது நேற்று எரி­குண்டு வீசப்­பட்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்­தித் தக­வல் தெரி­விக்­கிறது.

அந்­நாட்­டில் ராணு­வம் பிப்­ர­வரி 1ஆம் தேதி இரவு மின்­னல் வேகத்­தில் ஆட்­சிக்­க­விழ்ப்பு நிகழ்த்­தி­யது. அதன்­பின் அங்கு தொடர் போராட்­டங்­க­ளால் நாடு கொந்­த­ளிப்­பில் உள்­ளது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நாட்­டில் மீண்­டும் ஆங் சான் சூச்­சி­யின் ஜன­நா­யக ஆட்சி வேண்­டும் என்று கோரி ஆர்ப்­ப­ரித்து வரு­கின்­ற­னர்.

ஆர்ப்­பாட்­டங்­க­ளைக் கலைக்க ராணு­வம் வன்­மு­றை­யில் இறங்­கி­யுள்ள வேளை­யில், சூச்சி அம்­மை­யா­ரின் கட்சி நிர்­வா­கி­கள் தலை­ம­றை­வாகி விட்­ட­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், நேற்று அதி­காலை சுமார் 4.00 மணிக்கு அவ­ரது தேசிய ஜன­நா­யக இயக்­கக் கட்சி அலு­வ­ல­கம் மீது எரி­குண்டு வீசப்­பட்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்தி விளக்­கி­யது.

தாய்­லாந்து: தடுப்­பூசி போட்ட ஒரு வாரத்­தில் ஆட­வர் மர­ணம்

பேங்­காக்: தாய்­லாந்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆட­வர் அதற்­குப் பின் ஒரு வாரத்­தில் மர­ணம் அடைந்­துள்­ளார்.

இதைத் தொடர்ந்து அந்­நாட்­டின் சுகா­தார அதி­கா­ரி­கள் பொது­மக்­க­ளி­டையே அச்­சத்­தைப் போக்­கும் முயற்­சி­யில் அவ­சர அவ­ச­ர­மாக ஈடு­பட்டு வரு­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது. அந்த ஆட­வ­ரின் இறப்­புக் கார­ணம் இத­யத்­தில் இருந்து வயிற்­றுப் பகு­திக்­குச் செல்­லும் ரத்த நாளம் வெடித்­த­தால் ஏற்­பட்­டது என்று கூறும் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தடுப்­பூசி போடு­வது தொட­ரும் என்று விளக்­கம் அளித்­துள்­ள­னர்.

அந்த ஆட­வர் மார்ச் மாதம் 3ஆம் தேதி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார். பின்­னர் மார்ச் 13ஆம் தேதி மர­ண­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இது குறித்து கருத்­து­ரைத்த டாக்­டர் சோப்­போன் என்­ப­வர், "அவ­ரு­டைய மர­ணத்­துக்கு கார­ணம் ரத்த நாள வெடிப்பு தானே தவிர தடுப்­பூசி அல்ல என நான் நம்­பு­கி­றேன்," என்­றார்.

ஒரு­வ­ரின் இத­யத்­தி­லி­ருந்து செல்­லும் முக்­கிய ரத்த நாளம் வெடித்­தால் அது மர­ணத்தை விளை­விக்­கும் அபா­யம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.