வாஷிங்டன்: சூயஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள ஆக நீளமான கப்பலை மீண்டும் மிதக்கச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் கப்பல் மிதக்கச் செய்யப்படும் என்று அதன் ஜப்பானிய உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஷோயி கிசென் தலைவர் யூகிடோ ஹிகாகி பத்து இழுவைப் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவும் கடற்படை நிபுணர்களை அனுப்பி உதவி செய்ய முன்வந்துள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை சூயஸ் கால்வாயைக் கடந்து சென்றபோது 'எவர்கிரீன்' கப்பல் சிக்கிக் கொண்டது. இதனால் அவ்வழியாகச் சென்ற கப்பல்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

