பாரிஸ்: உலக முழுவதும் 510 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் நாடு களுக்கு இடையே பெரிய இடைவெளி காணப்படுவதாகக் கூறிய உலக சுகாதார நிறுவனம், ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் ஐரோப்பிய நாடுகளிலும் தென் அமெரிக்காவிலும் கொள்ளைநோய் இன்னமும் வேகமாகப் பரவி வருகிறது. பிரேசிலில் மட்டும் கிருமித் தொற்றினால் 300,000 பேர் வரை மடிந்துள்ளனர்.
மெக்சிகோவில் உயிரிழப்பு 200,000ஐ தாண்டியது.

