பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் அந்நகரம் மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து தலைநகரமான பிரிஸ்பேனில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் பேர் வசித்து வருகின்றனர்.
அங்கு ஏழு பேர் வரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 6.00 மணிக்கு முடக்கம் தொடங்கியது.
கடந்த ஜனவரியில் ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதால் மூன்று நாட்கள் பிரிஸ்பேன் முடக்கப்பட்டது.
ஆனால் சமூகத்தில் கிருமி தொற்றியது எப்படி என்பது புரியாமல் சுகாதார அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இதற்கிைடயே செய்தியாளர்களிடம் பேசிய குவீன்ஸ்லாந்து மாநில முதல்வர் அன்னாஸ்டேசியா பலஷுக், மேலும் நான்கு தொற்றுச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சமூகத்தில் கிருமி பரவு வதைக் காட்டுகிறது என்றார்.
கடந்த சனிக்கிழமை சமூகப் பரவலின் முதல் சம்பவம் பதிவானது. கிருமித்தொற்று தொடர்புகளின் தடங்களை அறிய முடக்கம் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "இது ஒரு சிரமமானப் பணிதான், ஈஸ்டர் தினம் வருகிறது. பள்ளி விடுமுறையும் தொடங்கு கிறது. அதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்," என்று முதல்வர் அன்னாஸ்டேசியா கூறினார்.

