கைரி: கட்சித் தேர்தலுக்கு அம்னோ உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்

கைரி: கட்சித் தேர்தலுக்கு அம்னோ உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்

1 mins read
77fae97e-e0eb-4804-bf33-3c402bbfb248
-

கோலா­லம்­பூர்: அம்­னோ­வில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யைச் சரி­செய்ய வேண்­டு­மெ­னில் உட­ன­டி­யாக கட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று அக்­கட்­சி­யின் முன்­னாள் இளை­யர் பிரி­வுத் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

பொதுத்­தேர்­தல் இந்த ஆண்­டுக்­குள் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனவே, பொதுத்தேர்­த­லுக்­குப் பிறகு கட்­சித் தேர்­தலை தள்ளி வைக்­கக்­கூ­டாது, அது உட­ன­டி­யாக நடத்­தப்­பட வேண்­டும். அப்­போ­து­தான் கட்­சிக்­குள் இருக்­கும் நெருக்­க­டி­யைத் தீர்க்க முடி­யும் என்றும் திரு கைரி நேற்று தனது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் கூறி­யுள்­ளார்.

இப்­போ­தைய சூழ­லில் அம்னோ இரண்டு பிரி­வு­க­ளாக உள்­ளது என்­றும் ஒரு பிரிவு கட்­சித் தலை­வர் அஹ்­மது ஸாகித் ஹமிடி தலை­மை­யி­லும் இன்­னொரு பிரிவு கட்­சி­யின் முன்­னாள் பொதுச்­செ­ய­லா­ளர் அனு­வார் மூசா தலை­மை­யி­லும் உள்­ள­தாகவும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

பிர­த­மர் முகை­தீ­னின் பிரி­பூமி பெர்­சாத்து மலே­சியா கட்­சி­யு­ட­னான உற­வு­க­ளைத் துண்­டித்­துக்­கொள்ள கட்சி முடிவு செய்­துள்­ள­தா­க­வும், அடுத்த பொதுத்­தேர்­தலை தனித்து எதிர்­கொள்ள அம்னோ தயா­ராக இருப்­ப­தா­க­வும் ஸாகித், வார இறு­தி­யில் நடந்த கட்­சி­யின் ஆண்டு மாநாட்­டில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தார்.

பெரிக்­காத்­தான் நேச­னல் கட்­சி­யு­டன் உறவை முறித்­துக் கொள்ள விரும்­பும் ஸாகித் ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் அம்­னோவின் முன்­னாள் தலை­வ­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான திரு நஜிப் ரசாக்­குக்கு செல்­வாக்கு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.