சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக 9 சமூகத் தொற்று பதிவாகியுள்ளது. அதனையடுத்து கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அம்மாநிலம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிட்டனின் உருமாறிய கிருமித்தொற்றைத் தடுக்க அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
பிரிஸ்பேனில் மூன்று நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்ட மறு நாள் அங்கு 15 புதிய தொற்றுப் பாதிப்பு பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் இரண்டு குறிப்பிட்ட இடங்களுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்று மருத்துவரிடமும் மற்றொன்று செவிலியர் ஒருவரிடமும் தொடர்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடக்கநிலை அறிவிப்பால் பிரிஸ்பேனில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பேர், வியாழக்கிழமை வரை வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என்றும் நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் குவீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சர் அன்னாஸ்டசியா மக்களைக் கேட்டுக்கொண்டார்.

