தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுடன் வர்த்தகம்; பாகிஸ்தான் பரிசீலனை

1 mins read
8dfac5ce-d7de-4df8-92f5-4a45d63cbf63
-

லாகூர்: பரம விரோ­தி­களான இந்­தி­யா­வுக்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடை­யி­லான பதற்­றம் தணிந்து அமைதி காணப்­ப­டு­கிறது. இந்த நிலை­யில் இந்­தி­யா­வு­டன் வர்த்­த­கத்­தை மீண்டும் தொடங்க பாகிஸ்­தான் பரி­சீ­லனை செய்து வரு­கிறது. இது தொடர்­பாக நாட்­டின் பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­புக் குழு­வு­டன் பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான் கான் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ளார். இதை­ய­டுத்து உத்­தேச திட்­டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இம்­ரான் கான்­தான் இறுதி முடிவை எடுப்­பார் என்று தனிப்­பட்ட விவ­கா­ர­மாக இருப்­ப­தால் பெயர் குறிப்­பிட விரும்­பாத அர­சாங்க அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

இது பற்றி கருத்­த­றிய முயற்சி செய்­த­போது பாகிஸ்­தா­னின் வர்த்­த­கப் பிரிவு பதி­ல­ளிக்க மறுத்து­ விட்­டது.

முஸ்லிம் பெரும்பான்மை யினர் வசிக்கும் தனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை 2019 ஆகஸ்ட் மாதம் இந்தியா ரத்து செய்ததால் அதனுடனான அரசதந்திர உறவு, வர்த்தக உறவை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டது.