இந்தோ.வில் மழை, வெள்ளம்; பலர் பலி

1 mins read
5082848c-a94f-4eed-b07f-dd6e80835eb4
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் பருவ மழை கார­ண­மாக ஏற்பட்ட திடீர் வெள்­ளம், நிலச்சரிவில் 23 பேர் கொல்­லப்­பட்­ட­னர். ஒன்­பது பேர் காயம் அடைந்­த­னர். ஐவர் காண­வில்லை. தீமோர் லெஸ்ட்­லி­யிலும் எட்­டுப் பேர் மாண்­ட­னர். ஃபுளோர் தீவில் குறைந்­தது 49 குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக பேரி­டர் நிர்­வாக முக­வை­யின் பேச்­சா­ள­ர் ரதிட்யா தெரி­வித்­தார்.

லாம­னெலி கிரா­மத்­தில் பத்­துக்­கும் மேற்­பட்ட வீடு­கள் நிலச்­சரிவில் புதைந்ததாகவும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தாகவும் அவர் கூறினார்.

தீமோர் லெஸ்ட்லி தலைநகர் திலியில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். கடும் மழை காரணமாக திலியில் உள்ள அதிபர் மாளிகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமையிலிருந்து திலியில் தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை தொடரும் என எதிர் பார்க்கப்படுவதால் சேதம் அதி கரிக்கும் என அஞ்சப்படுகிறது.