தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தில் கடும் கட்டுப்பாடு

1 mins read
50658229-2c08-4716-b7ad-bcbf02699c41
-

பேங்­காக்: கொவிட்-19 தொற்று மீண்­டும் பர­வி வருவதால் அதைக் கட்­டுப்­ப­டுத்­தும்­வி­த­மாக தாய்­லாந்­தில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

தலை­ந­கர் பேங்­காக்­கி­லும் மற்ற 40 மாநி­லங்­க­ளி­லும் மதுக்­கூ­டங்­கள், கர­வோக்கே, உடற்­பி­டிப்பு சேவை நிலை­யங்­கள் உள்­ளிட்ட பொழு­து­போக்கு, கேளிக்கை நிலை­யங்­களை வரும் 23ஆம் தேதி வரை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­களை நீட்­டிக்­க­வும் நிலைமை மேம்­பட்­டால் கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்­த­வும் மாநில ஆளு­நர்­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கொவிட்-19 சூழல் நிர்­வாக மையப் பேச்­சா­ளர் தவீசில்ப் விசனுயோதின் கூறினார்.

தாய்­லாந்தில் அடுத்த வாரம் புத்­தாண்டு கொண்­டாட்­டங்­கள் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் மீண்­டும் கொரோனா பரவி வரு­வது பொரு­ளி­ய­லைக் கடு­மை­யா­கப் பாதிக்­கும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. அத்­து­டன், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டி­ன­ருக்­குச் சுற்­று­லாத் தலங்­களைப் படிப்­படி­யா­கத் திறந்­து­வி­டும் திட்­டங்­களும் தாம­த­மா­க­லாம்.

தாய்லாந்தில் இம்­மா­தத்­தில் மட்டும் புதி­தாக 2,000 பேருக்கு மேல் கிருமி தொற்­றி­விட்­டது.

இதை­ய­டுத்து, மேலும் பத்து மில்­லி­யன் கொரோனா தடுப்­பூ­சி­களைக் கொள்­மு­தல் செய்­யும்­படி அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா உத்­த­ர­விட்­டுள்­ளார். கிட்­டத்­தட்ட 45 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போட தாய்­லாந்து இலக்கு கொண்­டுள்­ளது.

இத­னி­டையே, கொரோனா பரி­சோ­த­னைக்­கான தேவை அதி­க­ரித்­துள்ள நிலை­யில் போதிய அள­வில் மருத்­து­வச் சாத­னங்­கள் வந்து சேரா­த­தால் பேங்­காக்­கில் குறைந்­தது 12 மருத்­து­வ­ம­னை­கள் பரி­சோ­த­னை­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளன.