ஐநா தூதர்: மியன்மாரில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கவேண்டும்

ஐநா தூதர்: மியன்மாரில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கவேண்டும்

1 mins read
67e9d179-b7c0-4b42-b52b-17dfc4767fe0
-

யங்­கூன்: மியன்­மார் ராணு­வத்­திற்கு எதி­ரா­கப் போர்க்­கொடி உயர்த்­தி­ உள்ள அந்­நாட்­டிற்­கான ஐநா தூதர், அந்­நாட்­டின் வான்­வெ­ளி­யில் விமா­னங்­கள் பறக்­கத் தடை விதிக்­கவேண்­டும் என வலி­யு­றுத்­தியுள்ளார்.

"உங்­க­ளது கூட்டு, வலு­வான நட­வ­டிக்­கையே உட­ன­டித் தேவை," என்று ஐநா பாது­காப்பு மன்­றக் கூட்­டத்­தில் பேசிய திரு கியாவ் மோ டுன், ஆயுத இறக்கு­ம­திக்­கும் மியன்­மார் ராணு­வத்­தின்­மீ­தும் தடை­கள் விதிக்­கப்­பட வேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்துள்ளார்.

அனைத்­து­ல­கச் சமூ­கம், குறிப்­பாக ஐநா பாது­காப்பு மன்­றம் போதிய, வலு­வான நட­வடிக்கை எடுக்­க­வில்லை என்­றும் அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

விமா­னங்­கள் பறக்­கத் தடை­செய்­யப்­பட்ட பகுதி அறி­விக்­கப்­பட வேண்­டும் என்­றும் அதன்­மூ­லம் குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் ராணு­வம் விமா­னம் மூலம் தாக்­கு­தல் நடத்து­வதைத் தவிர்க்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

முன்னதாக, பாகோ நக­ரில் நேற்று முன்­தி­னம் இர­வும் நேற்று அதி­கா­லை­யிலும் குறைந்­தது 60 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அல்­ஜ­சீரா செய்தி தெரி­வித்­தது.

இதனிடையே, ராணுவ கேப்­டனின் உத­வி­யா­ளர் ஒரு­வ­ரைக் கொன்­ற­தற்­காக 19 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்டுள்­ளது.