மணிலா: பிலிப்பீன்சில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள மருத்துவ
மனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் மணிலாவிலும் அதன் அருகில் உள்ள நான்கு மாநிலங்களிலும் கடந்த இரண்டு வாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் தளர்த்துகிறது. இன்றிலிருந்து இம்மாதம் இறுதி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதற்கு மேம்
படுத்தப்பட்ட சமூகத் தனிமைப்
படுத்துதல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயாளிகளுக்காக கூடுதலாக 3,000 படுக்கைகள் சேர்க்கப்படுவதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இது மருத்துவமனை எதிர்கொள்ளும் நெருக்கடியை சற்று தளர்த்தும் என்று அவர் கூறினார்.
பிலிப்பீன்சில் மேலும் 11,000க்கும் மேற்பட்டோருக்கு கோரோனா
கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இம்மாதம் 9ஆம் தேதியி
லிருந்து பிலிப்பீன்சில் அன்றாட கொவிட்-19 பாதிப்பு 11,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பிலிப்பீன்சில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 865,000ஆக பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 15,000 பேர் மாண்டுவிட்டனர்.
தென்கிழக்காசிய நாடுகளில் இந்தோனீசியாவை அடுத்து, கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிலிப்பீன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

