பெய்ஜிங்: சீனாவின் சிங்ஜியாங் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, அதில் இருந்த சுரங்கப் பணி தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, மீட்புப் பணியாளர்கள் எட்டு தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் 21 தொழிலாளர்கள் சுரங்கத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 21 தொழிலாளர்களில் 13 பேரின் இருப்பிடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாக சீன ஊடகம் தெரிவித்தது.
எஞ்சிய ஒன்பது தொழிலாளர்களின் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் சீனாவின் ஷங்டோங் மாநிலத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் வெடிப்பு நிகழ்ந்ததில் பத்து சுரங்கப் பணி தொழிலாளர்கள் மாண்டனர்.

