லண்டன்: பிரிட்டனின் எலிசபெத் அரசியாரின் கணவரான இளவரசர் ஃபிலிப்பின் மரணத்தை அடுத்து வடஅயர்லாந்தில் பதற்றநிலை குறைந்துள்ளது. அண்மைய ஆண்டுகளாக வடஅயர்லாந்தில் ஏற்படாத வன்முறை இம்முறை தலைவிரித்தாடும் என்று அஞ்சப்பட்டது.
ஆனால் இளவரசர் ஃபிலிப்பின் மரணச் செய்தி வெளிவந்ததி
லிருந்து அங்கு ஒரு சாராரிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு சற்று தணிந்துள்ளது.
பிரெக்சிட் விவகாரம், அயர்லாந்து தேசியவாத சமூகங்களுடனான பகைமை ஆகியவை வட
அயர்லாந்தின் பிரிட்டிஷ் ஆதரவு சங்கங்கள் இடையே கொந்
தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டது. தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் பேரணி நடத்த பிரிட்டிஷ் ஆதரவு சங்கங்கள் திட்டமிட்டிருந்தன.
ஆனால் இளவரசர் ஃபிலிப்பின் மரண அறிவிப்பு வெளியானதும் பேரணிக்கான திட்டங்கள்
கைவிடப்பட்டன.

