புருக்ளின்: மின்னியாபொலிசில் போலிஸ் சுட்டு ஒருவர் மரண மடைந்ததால் மக்கள் ஆத்திரத்தில் வாகனங்களை அடித்து நொறுக் கினர்.
அவர்களை கலைக்க போலிசார் பகீரத முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதத்தில் கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளாய்ட் மரணமடைந்த அதே இடத்தில் இந்தச் சம்பவமும் நடந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
காரிலிருந்த கறுப்பின ஆடவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
இதனால் ஆத்திரமடைந்த சில நுறு பேர் 'ஜார்ஜ் ஃபுளாய்டுக்கு நீதி வேண்டும்' உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி போலிசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் வாகனங்கள் மீது ஏறி குதித்தனர்.
அவர்களைக் கலைப்பதற்காக போலிசார் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதில் இருவர் காயம் அடைந்தனர்.
தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலுதவி களைச் செய்தனர். இரவு நெருங்கியதும் மேலும் சில நூறு பேர் புறநகர்ப் பகுதியில் உள்ள போலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் மேலும் பதற்றம் கூடியது. காவல்நிலையத்துக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் எரிச்சலை ஏற்படுத்தும் ரசாயனத்தைத் தெளித்தனர். அப்போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்கவில்லை.
போலிசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானவரின் பெயர் டாண்ட் ரைட் என்று தெரிவிக்கப் பட்டது. அதிகாலை 2.00 மணி அளவில் போக்குவரத்து விதியை மீறியதால் அவரை காரிலிருந்து வெளியேற்றி போலிசார் சோதனையிட்டனர். அவர் மீது ஏற்கெனவே கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவரை கைது செய்ய முயற்சி செய்தபோது அவர் காரில் ஏறி தப்ப முயற்சி செய்ததாகவும் அப்போது அதிகாரிகளில் ஒருவர் அவரை சுட்டதாகவும் போலிசார் கூறினர்.
இதற்கு முன்பு நடந்த சம்பவத்தில் ஃபுளாயிட்டின் கழுத்து மீது ஒன்பது நிமிடங்களுக்கு மேல் காலை வைத்து அழுத்திப் பிடித்ததால் அவர் மரணமடைந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மூன்று வாரமாக நடைபெற்று வருவதால் மின்னியாபொலிசில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

