ஒரு நாள் பதிவான கொவிட்-19 சம்பவங்களில் அமெரிக்காவை மிஞ்சிவிட்டது கனடா

ஒட்­டாவா: கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­யதை அடுத்து வருத்­தம் அளிக்­கும் ஒரு மைல்­கல்லை கனடா அடைந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வை­விட அதி­க­மான ஒரு நாள் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கன­டா­வில் பதி­வா­கி­உள்­ளன.

கடந்த ஏழு நாட்­க­ளாக கன­டா­வின் ஒவ்­வொரு 100,000 பேரில் சுமார் 22 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு வரு­கிறது. குறிப்­பாக, கன­டா­வின் ஆகப் பெரிய நக­ரான டொரொன்டோ, அதிக நெருக்­கு­தலுக்கு ஆளா­கி­யுள்­ளது.

"இது­வரை இருந்து வரும் கொள்­ளை­நோ­யின் ஆக மோச­மான கட்­டம் இது­தான்," என்­றார் அந்­நாட்டு பல்­க­லைக்­க­ழக சுகா­தார கட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வாக அதி­காரி கெவின் ஸ்மித்.

அவ­சர அறுவை சிகிச்­சை­க­ளைத் தவிர மற்ற அனைத்து சிகிச்­சை­க­ளை­யும் நிறுத்தி வைக்­கு­மாறு ஒன்­டா­ரியோ உத்­த­ர­விட்­டுள்­ளது.

புற்­று­நோய், இதய மற்­றும் மூளை அறுவை சிகிச்­சைக்­காக காத்­தி­ருக்­கும் நோயா­ளி­கள், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சிறு­வர்­க­ளுக்­கான டொரொன்டோ மருத்­து­வ­ம­னை­யில் பெரி­ய­வர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் நிலை­யும் வந்­து­விட்­டது.

டொரொன்டோ­வில் நேற்று முன்­தி­னம் 1,296 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இந்­நிலை தொடர்ந்­தால் மாத இறு­திக்­குள் நாள் ஒன்­றுக்கு 2,500 சம்பவங்கள் பதிவாகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!