ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் 2,500 அமெரிக்கத் துருப்புகள்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை இவ்வாண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் முழுமையாக மீட்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
படை மீட்பு தொடர்பாக முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தலிபான்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்.
வரும் மே 1ஆம் தேதிக்குள் முழுமையான படை மீட்புக்கு அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த இலக்கை அமெரிக்கா தவற விடும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் 2,500 அமெரிக்கத் துருப்புகளை இன்னும் இருவாரத்திற்குள் திரும்பப் பெற சாத்தியமில்லை என்று செவ்வாய்க்
கிழமை செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறினர்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு இவ்வாண்டில் வருகிறது.
அதற்குள் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாகத் திரும்பப் பெற அதிபர் ஜோ பைடன் திட்டமிடுவதாக அவர்கள் கூறினர்.
இந்தத் தேதியில் பின்னர் மாற்றம் எதுவும் செய்யப்படுவதற் கான சாத்தியமில்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கப் படைகள் முழுமையாக மீட்கப்பட்டால் உள்நாட்டு வன்செயல்கள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
வன்செயல்களைக் குறைப்பதாக தலிபான் அமைப்பு அளித்த வாக்குறுதி தற்போது கடைப்பிடிக்கப்
படுவதில்லை என நேட்டோவும் வடஅட்லாண்டிக் அமைப்பும் கூறி வருகின்றன.

