மினியாபொலிஸ்: அமெரிக்காவில் கறுப்பின இளையர் சுடப்பட்டு மாண்ட சம்பவத்தைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் போலிஸ் தலைமை அதிகாரியும் துப்பாக்கியால் சுட்ட பெண் போலிஸ் அதிகாரியும் தங்களது பதவியிலிருந்து விலகி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சாலையில் வாகனச் சோதனை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது டான்ட் ரைட், 20, என்னும் இளையரை அதிகாரிகள் இடைமறித்தனர். அவரது வாகனப் பதிவு காலாவதியாகிவிட்டதைத் தொடர்ந்து காரைவிட்டு வெளியேற்றப்பட்ட அவரை கைவிலங்கிட அதிகாரிகள் முயன்றனர். அப்போது அதனைத் தடுத்து காரில் ஏற முயன்ற இளையர் நெஞ்சில் சுடப்பட்டார். பின்னர் அவர் மாண்டார். இச்சம்பவம் கறுப்பின மக்கள் உள்ளிட்ட பலரை சினம் கொள்ளச் செய்தது. அதனைத் தொடர்ந்து இரு நாட்களாக மினசோட்டாவின் ஆகப் பெரிய நகரான புளூக்ளின் சென்டரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இளையரைச் சுட்ட அதிகாரி 26 வயது பெண் போலிஸ் அதிகாரியான கிம் போட்டர் என்று அடையாளம் காணப்பட்டார். இதற்கிடையே, சம்பவத்தை விசாரித்த தலைமை போலிஸ் அதிகாரி டிம் கானன், சம்பவம் ஒரு விபத்து என்றும் மின்னதிர்ச்சி 'டேசர்' துப்பாக்கியை பணிக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக உண்மையான கைத்துப்பாக்கியை அதிகாரி எடுத்துச்சென்று பயன்படுத்தியதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த இரு அதிகாரிகளையும் வேலையிலிருந்து நீக்க நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புரூக்ளின் சென்டர் மேயர் மைக் எலியட் கூறினார்.
அதனைத்தொடர்ந்து போலிஸ் தலைமை அதிகாரி டிம் கேனனும் துப்பாக்கிச்சூடு நடத்திய கிம் போட்டரும் செவ்வாய்க்
கிழமை வேலை விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்.

