மலேசியாவில் 1.05 மி. தடுப்பூசிகள்; சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகம்

மலேசியாவில் 1.05 மி. தடுப்பூசிகள்; சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகம்

1 mins read
3632f89d-09e8-4426-83c1-c6f3b10848fa
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின் முதற்­கட்­டத்­தில் 417,470 பேர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்டு உள்­ள­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆதம் பாபா கூறி­யுள்­ளார்.

இது செவ்­வாய்க்­கி­ழமை மாலை வரை­யி­லான நில­வ­ரம். இவர்­கள் தவிர 632,668 பேர் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். ஆக ஒட்­டு­மொத்­த­மாக மலே­சியா முழு­வ­தும் இது­வரை 1,050,138 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு உள்­ளன.

ஐந்து மாநி­லங்­களில் அதி­மான தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு உள்­ளன. சிலாங்­கூ­ரில் 86,577, சர­வாக்­கில் 65,580, கோலா­லம்­பூ­ரில் 62,724, ஜோகூ­ரில் 57,248 மற்­றும் சாபா­வில் 54,817 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு உள்­ள­தாக டாக்­டர் ஆதம் தமது டுவிட்­டர் பதி­வில் கூறி உள்­ளார். இரண்டு ஊசி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் பட்­டி­ய­லி­லும் சிலாங்­கூர் மாநி­லமே முத­லி­டத்­தில் உள்­ளது. அங்கு 57,664 பேர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக் கொண்டுள்­ள­னர்.

இனி­மேல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதிவு செய்­த­வர்­கள் பட்­டி­ய­லி­லும் அந்த மாநி­லமே பட்­டி­ய­லின் உச்சத்தில் உள்­ளது. மலே­சியா முழு­வ­தும் 8.69 மில்­லி­யன் பேர் அல்­லது 35.8% பேர் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

தடுப்­ப­பூ­சித் திட்­டத்­தின் முதற்­கட்­டம் பிப்­ர­வ­ரி­யில் தொடங்­கி­யது. இம்­மா­தம் அது முடி­வ­தற்­குள் 500,000 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்குத் தடுப்­பூசி செலுத்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

பின்­னர் இரண்­டாம் கட்ட நட­வ­டிக்கை தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும். அப்­போது 65 வய­தும் அதற்கும் மேற்­பட்­ட­ சுமார் 9.4 மில்­லி­யன் மூத்த குடி­மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடத் திட்­ட­மி­டப்­பட்டுள்­ளது.