தாய்லாந்தில் கிருமிப் பரவல் இதுவரை காணாத உச்சம்

தாய்லாந்தில் கிருமிப் பரவல் இதுவரை காணாத உச்சம்

1 mins read
620bc843-b7b5-4911-ac3b-adf92f1b3530
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் நேற்று 1,335 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­யது முதல் நேற்று பதி­வான இந்த எண்­ணிக்­கையே அந்­நாட்­டில் ஆக அதி­கம். மேலும் இந்த வாரத்­தின் மூன்­றா­வது உச்ச எண்­ணிக்கை அது. புதிய கிரு­மிப் பர­வல் அலையை எதிர்த்­துப் போராடி வரும் தாய்­லாந்­தில் இது­வரை 35,910 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது. இருப்­பி­னும் மரண எண்­ணிக்கை நீண்ட நாட்­க­ளாக நூறுக்­கும்

குறை­வாக 97 என்ற அள­வி­லேயே தொட­ரு­கிறது. சொங்ரான் புத்தாண்டு விடுமுறையை தாய்லாந்து மக்கள் கொண்டாடும் நிலையில் கிருமித் தொற்று எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. எனவே கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்ற வும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.