28 டன் வெங்காயம் பறிமுதல்

28 டன் வெங்காயம் பறிமுதல்

1 mins read
8caf1617-b908-403a-92df-67391e187575
-

இஸ்­கந்­தர் புத்ரி: மலே­சி­யா­வின் தஞ்­சோங் பெல­பாஸ் துறை­மு­கத்­தில் 28.35 டன் வெங்­கா­யம் பறி­மு­தல் செய்­யப்­பட்டுள்­ளது. சுமார் 250,000 ரிங்­கிட் மதிப்­புள்ள இந்த வெங்­கா­யம் தாய்­லாந்­திலிருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆவ­ணங்­களில் வெங்­கா­யம் என்­ப­தற்­குப் பதில் வேறு பொருள் குறிப்­பிடப்பட்டு இருந்ததால் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வழக்கமாக நடத்தப்பட்ட சோதனை யின்போது இவை சிக்கியதாக அவர்கள் கூறினர். இறக்குமதி ஆவணங்களில் முரண்பட்ட தகவல்களைத் தெரிவிப்போருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, 50,000 ரிங்கிட் அபராதம் போன்றவை விதிக்கப்படலாம்.