தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு புதிய ஏற்பாடு ஹாங்காங் செல்லும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் குறைப்பு

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு புதிய ஏற்பாடு ஹாங்காங் செல்லும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் குறைப்பு

3 mins read
8cfab819-7652-4170-9632-3ff066a762a2
-

ஹாங்­காங்­குக்­குச் செல்­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் 7 நாள்­க­ளுக்கு மட்­டும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் சூழல் இம்­மாத இறுதி அல்­லது அடுத்த மாதத் தொடக்­கத்­தி­லி­ருந்து தொடங்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

குறைந்த அள­வில் கொரோனா தொற்று அபா­யம் உள்ள சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து போன்ற நாடு­க­ளைச் சேர்ந்த, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் ஹாங்­காங் சென்­றால், 14 நாள்­க­ளுக்­குப் பதி­லாக 7 நாள்­க­ளுக்கு மட்­டும் தனி­மைப்­

ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

கொரோனா தொற்று அபா­யம் நடுத்­தர, அதிக அள­வில் உள்ள நாடு­க­ளி­லி­ருந்து ஹாங்­காங்­குக்­குச் செல்­வோர் தற்­போது நடப்­பில் இருக்­கும் 21 நாள்­க­ளுக்­குப் பதி­லாக 14 நாள்­க­ளுக்கு மட்­டும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்.

ஹாங்­காங்­குக்குச் செல்­லும் பய­ணி­கள், தனி­மைப்­ப­டுத்­த­லுக்­குப் பிறகு மேலும் 7 நாள்­க­ளுக்கு சுய­மாக கண்­கா­ணித்­துக்­கொள்ள வேண்­டும் என ஹாங்­காங் அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

சீனா தவிர மற்ற நாடு­க­ளி­

லி­ருந்து ஹாங்­காங்­குக்­குத் திரும்­பும் ஹாங்­காங் குடி­மக்­கள் தொடர்ந்து 21 நாள்­க­ளுக்கு கட்­டா­யம் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

இதற்­கி­டையே, விமா­னப் பய­ணங்­க­ளின் மூலம் உரு­மா­றிய கொரோனா தொற்று பர­வும் அபா­யத்­தைக் குறைக்­கும் பொருட்டு, விமா­னங்­க­ளுக்­கான விதி­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

ஹாங்­காங் சென்­ற­தும் மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னை­களில் ஒரு விமா­னத்­தில் சென்ற பய­ணி­களில் மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டால், அந்த விமா­னம் 14 நாட்­க­ளுக்­குத் தடை செய்­யப்­ப­டு­கிறது. இதற்கு முன்பு இந்த எண்­ணிக்கை 5 அல்­லது அதற்கு மேல் என்று இருந்­தது. இந்த நடை­முறை நேற்று முதல் நடப்­புக்கு வந்­தது.

ஏழு நாள்­க­ளுக்­குள் ஒரே இடத்­தி­லி­ருந்து கிளம்­பும் ஒரே விமான நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஏதா­வது இரண்டு விமா­னங்­களில் இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட பய­ணி­க­ளுக்கு கொரோனா தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டா­லும் அந்­தத் தடை பொருந்­தும்.

அடுத்­த­டுத்த இரண்டு விமா­னங்­களில் மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட பய­ணி­க­ளுக்கு தொற்று இருந்­தால் இத்­த­கைய தடை முன்பு விதிக்­கப்­பட்­டது.

விமான நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னை­களில் யாருக்­கா­வது கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்டு, அதே விமா­னத்­தில் பய­ணம் செய்த வேறு ஒரு பயணி எல்லை கடந்த பய­ணி­கள் சட்­டங்­க­ளின்­கீழ் விதி­மு­றை­களை மீறி­னா­லும் அந்த விமா­னம் 14 நாள்­க­ளுக்குத் தடை செய்­யப்­படும் என்ற முன்­பி­ருந்த விதி­முறை இப்­போ­தும் நடப்­பில் உள்­ளது.

தென்­கொ­ரி­யா­வில் காணப்­படும் N501Y வகை கொரோனா கிருமி ஹாங்­காங்­கில் பர­வு­வ­தைத் தடுக்­கும் பொருட்டு அத்­த­கைய கொரோனா தொற்று உள்ள குறைந்­தது ஐவர் பய­ணம் செய்த விமா­னங்­க­ளுக்­கும் 14 நாள்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய விமா­னங்­கள் கிளம்­பிய இடங்­களில் குறைந்­த­பட்­சம் 2 மணி நேரம் இருந்த பய­ணி­கள் ஹாங்­காங்­குக்­குள் நுழை­ய­வும் 14 நாள்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் பயண ஏற்­பா­டு­கள் குறித்த பேச்­சு­ வார்த்­தை­க­ளின் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலை­யில் இந்த அறி­விப்­பு­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சிங்­கப்­பூர் - ஹாங்­காங் இடையே நேரடி விமா­னப் பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள் பரி­சோ­தனை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும். இந்த ஏற்­பாட்­டின்­படி, பய­ணி­கள்

தனி­மை­ப்படுத்­தப்­படமட்­டார்­கள்.

இந்த நேரடி விமா­னப் பய­ணம் மேற்­கொள்­வோர் பய­ணத்­துக்கு முன்­பாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என மார்ச் மாதத்­தில் ஹாங்­காங் முன்­மொ­ழிந்­தது.

பயண ஒப்­பந்­தங்­கள் (டிரா­வல் பபல்) மூலம் இயங்­கும் விமா­னங்­களில் ஹாங்­காங்­கி­லி­ருந்து பய­ணம் மேற்­கொள்­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என இந்த வாரத்­தில் அந்­நாட்டு தலைமை நிர்­வாகி கேரி லாம் குறிப்­பிட்­டார்.