ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர் ஒருவரை மியன்மார் பாதுகாப்புப் படை கைது செய்தது

ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர் ஒருவரை மியன்மார் பாதுகாப்புப் படை கைது செய்தது

1 mins read
73d193c4-ab0b-46cf-a03c-3f2812bef18c
-

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சிக்கு எதி­ரா­கப் போரா­டும் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரான வாய் மோ நயிங் என்­ப­வர் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் நேற்று கைது செய்­யப்­பட்­டார். நண்­பர்­கள், சக ஊழி­யர்­க­ளு­டன் மோட்­டார்­சைக்­கி­ளில் பேரணி ஒன்றை நடத்­தி­ய­போது காரில் சென்ற பாது­காப்­புப் படை­யி­னர் அவ­ரைக் கைது செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ராணுவத்­தி­ற்கு எதி­ரா­கப் போரா­டு­வோ­ரில் முக்­கி­ய­மான ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் வாய் மோ நயிங் 25 வய­தான முஸ்­லிம் இளை­யர்.

யங்­கூ­னி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 700 கி.மீ. வடக்­கில் இருக்­கும் மொனிவா நக­ரில் இந்­தப் பேரணி நடத்­தப்­பட்­டது.

மோட்­டார்­சைக்­கிள்­கள் கூட்­ட­மா­கச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது எதிர்த் திசை­யி­லி­ருந்து வந்த கார் வேக­மாக மோட்டார்சைக்கிள்களின் அருகில் சறுக்கி திடீரென நின்றதைக் காட்டும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் பர­வின. ஆனால், அந்­தக் காணொளி இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­யதா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.