ஜிம்மி லாய்க்கு 14 மாதச் சிறைத் தண்டனை

ஜிம்மி லாய்க்கு 14 மாதச் சிறைத் தண்டனை

1 mins read
0710f1d3-6f61-4b64-b595-12053edc8255
திரு ஜிம்மி லாய்கோப்புப்படம்: ஏஎஃப்பி -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கின் ஊட­கத்­து­றை­யின் பெரும்­புள்­ளி­யான ஜிம்மி லாய் (படம்) உட்பட 9 பேர் மீது அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக புதிய தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குத் தொடுக்­கப்­பட்டு அவர்­கள் குற்­ற­வா­ளி­கள் என அறி­விக்­கப்­பட்­டது.

அந்த வழக்­கின் தீர்ப்பு நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அதில், 2019ல் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­க­ளின் ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது சட்­ட­விரோ­த­மான ஒன்­று­கூ­ட­லில் ஈடு­பட்­ட­தற்­காக திரு ஜிம்மி லாய்க்கு 14 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மற்ற ஒன்­பது பேரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்­து­கொண்­ட­தற்­கா­க­வும் மேலும் மூன்று பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த போராட்­டத்­தில் பங்­கு­பெற்­ற­தற்­கா­க­வும் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. திரு ஜிம்மி லாய், ஹாங்­காங்­கின் புகழ்­பெற்ற 'ஆப்­பிள் டெய்லி' நாளி­த­ழின் நிறு­வ­ன­ரா­வார்.

இந்த வாரத் தொடக்­கத்­தில் திரு ஜிம்மி, சிறை­யில் இருந்து தன் கைப்­பட எழு­தி­யி­ருந்த கடி­தம் ஒன்றை அவ­ரது 'ஆப்­பிள் டெய்லி' நாளி­தழ் அப்­ப­டியே வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில், "நீதிக்­கா­கப் போரா­டு­வது செய்­தி­யா­ளர்­க­ளா­கிய நமது கடமை. நம்­மீது இழைக்­கப்­படும் அநீ­தி­யைக் கண்டு கொள்ளாமல் இருக்­கா­ம­லும், தீயவை நம்­மைத் தீண்­டு­வ­தற்கு இடம் கொடுக்­கா­ம­லும் இருப்­ப­தன் மூலம் நாம் நமது பொறுப்பை நிறை­வேற்­று­கி­றோம்," என்று கூறி­யுள்­ளார்.