மலேசியாவில் 40 சுகாதாரப் பணியாளர்களுக்குத் தொற்று அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

மலேசியாவில் 40 சுகாதாரப் பணியாளர்களுக்குத் தொற்று அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

1 mins read
62da23ac-4243-4e20-ba75-b42a4daf31c3
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு மித­மான அறி­கு­றி­களே தென்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்­ப­டக்­கூ­டும் என எச்­ச­ரித்­தார்.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 40 சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­கள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். அவற்­றுள் 9 பேருக்கு, தடுப்­பூசி போட்டு, இரு வாரங்­க­ளுக்­குப் பிறகு தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் 31 பேருக்கு தடுப்­பூசி போட்ட இரு வாரங்­க­ளுக்­குள்­ளாக தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

முதல் தடுப்­பூசி மட்­டுமே போட்­டுக்­கொண்ட 142 சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தமது ஃபேஸ்புக் பதி­வில் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கொரோனா தொற்­றால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வது, இறப்பு நிகழ்­வது போன்­ற­வற்­றி­லி­ருந்து இந்­தத் தடுப்­பூ­சி­கள் பாது­காப்­ப­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்ட 14 நாட்­க­ளுக்­குப் பிறகே அதி­க­பட்ச நோய் எதிர்ப்பு சக்தி படிப்­ப­டி­யாக உரு­வா­கும் என்று குறிப்­பிட்ட டாக்­டர் ஹிஷாம், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிற­கும் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கைவி­டக்­கூ­டாது என்­றார்.

பிப்­ர­வரி முதல் ஏப்­ரல் வரை­யி­லான கால­கட்­டத்­தில் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது. நாளை முதல் வய­தா­ன­வர்­க­ளுக்­கும் உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள், உடற்­குறை உள்­ள­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் பணி தொடங்­க­வுள்­ளது. அடுத்த மாதம் மற்­ற­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கப்படும்.