வாஷிங்டன்: ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் பலருக்கு நேற்று முன் தினம் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹாங்காங்கின் முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜிம்மி லாய் மற்றும் 4 முக்கிய ஜனநாயக ஆர்வலர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டில் 'ஜனநாயகத்தின் தந்தை' என அறியப்படும் மார்ட்டின் லீயின் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்குச் சிறப்பு குடிநுழைவுத் திட்டம் பற்றி கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அறிவித்த மூன்று வாரங்களுக்குள் 500க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கனடாவின் குடிநுழைவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். வேலை அனுமதி கோரி 503 விண்ணப்பங்களும் வேலை அனுமதியை நீட்டிக்கக்கோரி 10 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

