ஊழியர்கள் நால்வர் சுட்டுக் கொலை, பலர் காயம்

ஊழியர்கள் நால்வர் சுட்டுக் கொலை, பலர் காயம்

1 mins read
f65a9301-46fc-45be-96a5-414ca041605a
-

டாக்கா: ஊதிய உயர்வு கேட்டு போராட்­டம் நடத்­திய பங்­ளா­

தே­ஷின் தென்­கி­ழக்­குப் பகு­தி­

யி­லுள்ள அனல்­மின் நிலைய ஊழி­யர்­கள்­மீது போலி­சார் நேற்று துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­தில் குறைந்­தது நால்­வர் பலி­யா­கி­னர், பலர் காய­ம­டைந்­தனர் என போலிஸ் தெரி­வித்­தது. காய­ம் அ­டைந்­த­வர்­களில் அறு­வர் போலி­சார். அந்த மின் நிலை­யக் கட்­டு­மா­னம் நடந்­து­கொண்­டி­ருக்­கும் நிலை­யில் போராட்­டக்­கா­ரர்­கள் போலி­சார் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­தால் துப்­பாக்­கிச்­சூடு நடத்த வேண்­டிய சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­ட­தாக போலிஸ் அதி­காரி அஸி­ஸுல் இஸ்­லாம் ராய்ட்­டர்ஸ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சீனா­வின் SEPCOIII எலக்ட்­ரிக் பவர் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வ­னம், அந்த மின் நிலை­யத்­தைக் கட்­டும் நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­து­கொண்டநிலை­யில், அதைக் கட்­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த போராட்­டக்­கா­ரர்­கள் நால்­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். அந்த வட்­டா­ர­வா­சி­கள் தங்­க­ளுக்­குள் சண்­டை­யிட்­டுக்­கொண்­ட­தால் கல­வ­ரத் தடுப்பு போலி­சார் அப்­போது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­னர்.